என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Thursday, May 30, 2013

பெரியாருக்கு நன்றி...!

மே 23 இரவு காயத்ரிக்கான செய்தியை முகநூல் பார்த்து அதை அனைவருக்கும் பகிர்ந்துருந்தேன்,மே 24 தேதி ஜயா பொன்னையன் அழைத்திருந்தார்,காயத்ரிக்கு உதவ தஞ்சை சார்ந்த ஜயா திருநாவுகரசு அவருடைய நண்பர்கள் காயத்ரியின் கல்விக்கு உதவ விரும்புகிறார் ஆதலால் காயத்ரியின் நிலையை உறுதிபடுத்த வேண்டும் ஏனெனில் காயத்ரியின் கைபேசி அணைத்து வைக்கபட்டுள்ளதால் நேரில் சென்று வர வேண்டுமென கேட்டு கொண்டார்,நான் காயத்ரியின் கிராமத்திற்கு சென்றேன்,கிராம மக்கள் திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தனர் ஆனால் காயத்ரியின் குடும்பம் ஆழ்ந்த அமைதியில் இருந்தனர்,ஏழை என்ற இலக்கணத்திற்கு எல்லா விதமான தோற்றத்தையும்  கொண்டிருந்த குடிசை வீடு,வீட்டின் முன் புறம் கீற்று கொட்டகையால் வேயப்பட்டிருந்தது,நான் அவர்களிடம் பேச முற்பட்ட போது ஒரு வித களக்கத்துடனே பேசினார்கள்,ஒன்றை வயது குழந்தையாக இருந்த பொழுதிலிருந்து காயத்ரிக்கு 13 வயது வரை ஆஸ்துமா என்ற முச்சுதிணறல் பிரச்சனை இருந்துள்ளது,அது தான் காயத்ரிக்கு உந்து சக்தியாக இருந்துதிருக்கிறது,பிறந்திலிருந்து இன்று வறுமையில் இருந்தாலும் காயத்ரியின் கல்வியை அது சேதப்படுத்தவில்லை,பத்தாம் வகுப்பில் 470 மதிபெண்கள் பெற்றதால் பரமத்தியில் இருக்கின்ற மலர் பள்ளி நிர்வாகம் இலவசமாகவே படிக்க வைத்துள்ளனர்,பள்ளி நிர்வாகம் காயத்ரிக்கு உதவி செய்யும் பொருட்டு THE HINDU பத்திரிகையில் காயத்ரியின் நிலையை விளக்கி செய்தி வெளியிட்டுள்ளனர்,நிறைய நல் உள்ளங்கள் காயத்ரியின் கைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடைய வாழ்த்தையும்,நிதி ஆதரவையும் தருவதாக தெரிவித்துள்ளனர் என்று சற்று இறுக்கத்தை தளத்தி பேச ஆரம்பித்தனர்,நிறைய நண்பர்கள் உதவிகரம் நீட்டியுள்ளனர்,அதலால் எங்கள் உதவி இப்பொழுது தேவை பாடாது,தேவை பட்டால் அழைக்கும் படி கேட்டுகொண்டேன், பத்திரிகையில் வெளியானதால் நிறைய அழைப்புகள்,இரவு 12 மணிக்கு மேல் கூட அழைத்துள்ளனர்,சிலர் உங்கள் ஏழ்மை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சிகீர்களா என கடுமையாக மிரட்டியுள்ளனர்,இன்னொருவர் பிள்ளையின் புகைபடத்தை பேப்பர்ல போட்டு எதிர்காலத்தையே பணத்திற்காக நாசம் செய்துவிட்டிற்கள் என எச்சரித்தும் உள்ளனர்,அப்பொழுது தான் புரிந்தது நான் வரும் பொழுது ஏன் களகத்தில் இருந்தார்கள் என்று,அதனால் தான் கைபேசியை அணைத்து வைத்துள்ளதாகவும்,மின்வெட்டு பிரச்சனை வேறு இருப்பதால் கைபேசிக்கு சார்ஜ் ஒரு பிரச்சனையாக இருப்பதாக சொன்னார்கள்,அவரின் மதிபெண் சான்றிதளை பார்த்தேன்,மொழி பாடங்களை தவிர்த்து அனைத்திலும் மருத்துவ படிப்புகான மதிபெண்கள்,ஒரு அட்டவணை பிரிவில் இருந்து சாதியை சொல்லி அடக்கி,அடிமைபடுத்தி வைத்திருக்கும் சேரியில் இருந்து ஒரு பெண் அனைத்து தடைகளையும் உடைத்து விட்டு எழுத்து நிற்கிறாள் என்பது பெரியாருக்கும்,அம்பேத்கரின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்,ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்ப்பட்ட சமுதாயத்திலிருது ஒரு மருத்துவர் உருவாவது நிச்சயம்,காய்த்ரி இட ஒதிக்கீடு மூலமாகவே இலவசமாக படிப்பார் என நம்புகிறேன்,கடைசியாக அந்த பெண் சொன்ன வார்த்தை அதிகமாக பணம் சேர்ந்தால் என்னை போல உள்ளவர்களுக்கு கொடுத்துவிடுவேன் என்றார், நெகிழ்ந்து விட்டேன்,கடைசியாக வெளியே வரும் போது பெரியாரை நினைத்து கொண்டேன்,நீங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழன் இன்னும் காட்டுமிராண்டியாக தான் வாழ்திருப்பான்,

No comments: