என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Thursday, November 29, 2012

திராவிடமல்ல, திரைப்படம்!!!

இனப்படுகொலையின் போது நம் குரல் எடுபடதற்க்கு காரணம் திராவிடமல்ல, திரைப்படம்,ஒரு சின்ன விசயம் ஈழ பிரச்சனையில் ஒன்றுமே செய்யாதா தே மு தி க இன்று தமிழ்நாட்டில் எதிர்கட்சி,காரணம் திரைப்படத் துறையின் மீதுல்ல மோகம்,,அவர்கள் நம் தமிழர்களை சிந்திக்கவே விடுவதில்லை அது சின்ன திரையாக இருக்கலாம் அல்லது பெரிய திரையாக இருக்கலாம்........அப்படியே நாம் சிந்த்தாலும் அவர்கள் திரைப்படததுறை சார்ந்தவராகவே உள்ளனர்.......
...உண்மையாக ஆளுகின்ற தகுதியிருந்தும் தமிழ்நாட்டில் ஐயா நல்லகன்னுவும்,பழ.நெடுமாறனும்தோற்கடிக்கப்பட்டார்கள்,புறகணிக்கப்பட்டார்கள்,இந்த நொடிகூட நமக்காக ஏதாவது ஒரு இடத்தில் போராட்டமோ,ஆர்ப்பாட்டமோ செய்துகொண்டிருப்பார்கள்,இதையெல்லாம் நம் வசதியாக மறந்துவிட்டோம், நேரமிருந்தால் நாளை திரையரங்கு பக்கம் சென்றுவாருங்கள் நம் இழிநிலைக்கு முதல் விதை அங்குதான் நடப்படுகிறது,

No comments: